Friday, May 11, 2012

ஆறுதல் சொல்ல.................................


உலகில் நான் அதிகம்
நினைவு இன்றி இருந்தது
நீ என்னை
காதலிப்பதாக
கூறிய நாள்தான்
அன்றுதான்
என் வாழ்வில் நிறை
போதையில் இருந்தேன்
அப்போது
நீயே
என் போதையாக இருந்தாய்
அறிவாயா?
மது அருந்தாதபோதும்
என் போதை தலைக்கேறி இருந்தது

வருடம் ஒருமுறை
வரும் பருவ மழைபோல- நீ
வந்து வந்து செல்வதனால்
உன் நினைவுகள் மட்டும்
என்னை சுற்றியே
வட்டம் இடுகின்றன
தவித்த கைகளுக்கும்
தேடி விரல்களுக்கும்
பார்த்த கண்களுக்கும்
ஆறுதல் சொல்ல
என்னால் முடியவில்லை
கொடிய தோழமையும்
கொதித்து ஆறிய நீரும்
பருகியே
என்னுடல்
இறந்து விட்டது

அன்பின் உறைவிடமாய்
தொலைபேசி ஆகியது
மதுவின்
வாடை எனோ பிடிக்கவில்லை

துள்ளல் பாடல் கேட்டு
வருடம் ஆகிறது
துண்டில் மீனுக்கும்
விடுதலை கொடுக்கின்றேன்
துள்ளிதிரிய ஆசை
விம்மி அழுதாலும்
உன்னுடன் அழ வேண்டும்- என்ற அவா?
கானலை என் வாழ்வில் நான்
கண்டு இருக்கின்றேன்
ஆனால்
இன்று இல்லை
அந்த கானலும் நீ தான் தெரியுமா?
தோடி இராகம்
கேட்டதே
உன்னை காதலித்த பின்தான்
விடுகதையாக
என் வாழ்வை
விடுகதையாக்கி
விடையானவள் நீதான்

``````````````````````````````````

No comments:

Post a Comment