Friday, April 6, 2012

உனக்காய் எழுதும் 
மடல்கள் அனைத்தையும் 
என் இதய முகவரிக்கே அனுப்புகிறேன்- நீ 
குடியிருப்பது அங்கென்பதால்

Monday, April 2, 2012

விடியலும் நீயடி................................

.........................................................................
விடியலும் 
அன்பும் 
நெருக்கமும் 
தொல்லையும் 
நான் இறைவனிடம் 
விரும்பி கேட்டவை 
வேதனை மிகுந்த 
என் வாழ்வை
 இன்பமாக்கி 
சாதனையாக்கி 
காட்டியவள் -நீயடி


....................................................................

அன்பின் உறைவிடமாய் ..............................

.........................................................................................
வருடம் ஒருமுறை வரும் பருவ மழைபோல- 
நீ வந்து வந்து செல்வதனால்
 உன் நினைவுகள் மட்டும் 
என்னை சுற்றியே வட்டம் இடுகின்றன 
தவித்த கைகளுக்கும் 
தேடி விரல்களுக்கும் 
பார்த்த கண்களுக்கும் 
ஆறுதல் சொல்ல என்னால் முடியவில்லை 
கொடிய தோழமையும் 
கொதித்து ஆறிய நீரும் 
பருகியே என்னுடல் இறந்து விட்டது 
 அன்பின் உறைவிடமாய் 
தொலைபேசி ஆகியது 
மதுவின் வாடை எனோ -பிடிக்கவில்லை




.............................................................................................

ஒரு பொழுதும் எனை விட்டு பிரிந்து விடாதே ......

.......................................... 
 தோழியாய்
 காதலியாய் 
அம்மாவாய் -என் 
மனைவியாய் 
வழும் நீ 
ஒரு பொழுதும் எனை விட்டு 
பிரிந்து விடாதே -என
 உள்ளம் தினமும் சொல்கின்றது 
ஆனால் 
ஆறுதல் படுத்த முடியவில்லை
 நாளை உன்னை சேர்வதற்காய் 
இன்று உன்னை பிரிகின்றேன்


 ..........................................

அருகிருந்தும் ஒன்று சேராத தண்டவாளங்களாய் நாம்.........

.................................................................. 
 அருகிருந்தும் 
ஒன்று சேராத தண்டவாளங்களாய்- நாம் 
இன்று 
ஆனாலும் நாளை பிரிகின்றோம்
 நிலவினை தூக்கில் இட்டு 
சூரியக்குளியல் குளிக்கும் நமக்கு 
எஞ்சி இருப்பதெல்லாம் ஓர் இஞ்சி உடல்தான் 
அதை விற்றுமா 
ஜெயிக்க வேண்டும் 
இந்த உலகில் வெறுமையிலும் 
ஏதோ ஒன்று இருப்பதை 
என்னால் கண்டு விட்டேன் 
மரணத்திலும் சுகம் உண்டு 
என எனக்கு நீ கூறிய பொழுது களில் 
நொருங்கி ய நெஞ்சம்
 இப்போது மட்டும் பெருமிதம் கொள்கின்றது


 ........................................................................