..................................................................
அருகிருந்தும்
ஒன்று சேராத
தண்டவாளங்களாய்- நாம்
இன்று
ஆனாலும்
நாளை பிரிகின்றோம்
நிலவினை தூக்கில் இட்டு
சூரியக்குளியல்
குளிக்கும் நமக்கு
எஞ்சி இருப்பதெல்லாம்
ஓர் இஞ்சி உடல்தான்
அதை விற்றுமா
ஜெயிக்க வேண்டும்
இந்த உலகில்
வெறுமையிலும்
ஏதோ ஒன்று இருப்பதை
என்னால் கண்டு விட்டேன்
மரணத்திலும் சுகம் உண்டு
என எனக்கு நீ கூறிய பொழுது களில்
நொருங்கி ய நெஞ்சம்
இப்போது மட்டும்
பெருமிதம் கொள்கின்றது
........................................................................

No comments:
Post a Comment