Friday, May 11, 2012

நான் உனக்காக..............................

நான் உனக்காக
காத்திருந்த
ஒவ்வொரு நொடியும்
சுகமாகத்தான் இருந்தது
அதற்காக
மீண்டும் ஒரு முறை
காத்திருக்க வைத்துவிடாதே
நதி அல்லாத
சில நாள் மரணத்திற்கு
வாழ்க்கைப்பட்ட நான்
மீண்டும் ஒரு முறை
மரணிக்க துடிக்கின்றேன்
ஏனெனில்
உனக்காக
மரணித்த நாட்கள்
சுகமாக இருந்தன
தூரத்தே நிலவு
தொங்கிக்கொண்டு
இருந்த போதும்
அவன் என்னுடன்
சேரக்காத்திருந்தாள்
ஒரு நொடி விலகி
மறு நொடி சேரும்
வரைக்கிடையில்
இருவரும்
ஒருமுறை மரணித்து
இருந்தோம்

No comments:

Post a Comment